Friday, December 31, 2010

முதல் தந்திரம் - அன்புடைமை


அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
                                                   திருமந்திரம் - 270

  • அன்பும் சிவமும் இரண்டாய் இருப்பது என்று கூறுவர் அறிவு தெளிவு இல்லாதவர்!
  • அன்பின் வடிவமே சிவம் என்பதையும், அன்பு மார்கமே சிவத்தை அடையும் மார்க்கம் என்பதையும் யாரும் அறியார்!
  • அன்பு மார்கமே சிவத்தை அடையும் மார்க்கம் என்பதை எல்லோரும் அறிந்தபின் (உணர்ந்தபின்)!
  • அன்பின் வடிவமாக சிவம் அமர்ந்து அருளினாரே!
கருத்து: அன்பே சிவம்!
சிவ நிலை: ஏதும் அசையா நிலை, பூரண நிலை, ஒடுங்கிய நிலை, சூன்ய நிலை, அதீத நிலை.  

Thursday, December 30, 2010

திருமூலர் வரலாறு

யான்பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்ற பற்றத் தலைபடுந் தானே
                                                 
                                                   திருமந்திரம் - 85

  • நான் பெற்ற இன்பத்தை இந்த வையகமெல்லாம் பெறட்டும்!
  • அந்த இன்பம் வான் பற்றி நிற்கும் மறை பொருளாகும்!
  • அந்த மறை பொருள் நம் உடலை பற்றி மந்திரமாக இருக்கின்றது!
  • அந்த மந்திரமே "உணர்வு(ஓம்)" எனும் மந்திரம்!
  • அது "பிரணவ மந்திரம்" என்றும் சொல்லபடுகின்றது!
  • ஆகவே அந்த உணர்வை பற்றப் பற்ற, மந்திரத்தை சொல்ல சொல்ல ஜீவன் உச்சியில் சிவமாக வெளிப்படுமே! 
குரு வாக்கு: ஆகவே தமிழ் மொழி பிரணவ மொழி ஆகும்!